மனித வாழ்வு கிடைக்க எவ்வளவு தவம் செய்திருப்போம். கிடைத்ததும் இறைவனனின் அடியை பிடித்து அவனை அடைய எவ்வளவு தவம் செய்திருப்போம். நம் வாழ்வை முழுவதும் இறைவனுக்கு அர்ப்பணித்து நம் தேடுதல் அனைத்தும் அவனை அடைவதே என்னும் நிலை வரும் வரை உலகில் பிறப்பை பெற்றுக்கொண்டே இருக்கிறோம். இறைவனை அடைவதற்கு நமக்கு உள்ள தூரம் ஒரு இம்மி அளவு என்று நினைக்கும் போது அவன் கருணையை நினைத்து கண்ணீர் விட வேண்டும். இம்மி அளவு தூரம் கடக்க பலப் பல பிறப்புகள் ? காரணங்கள் நம் தேடுதல் இறையை அடைவதை பற்றி இல்லையே. துருவன் ஏழு நாட்களிலே இறைவனை அடைந்த்தார் என்று புராணம் கேட்கும் போது மனதிற்குள் ஒரு நம்பிக்கை நாமும் என்றாவது ஒரு நாள் நம் தேடலை முடித்து நம் இறைவனை அடைவோம்.